திருப்பூர் நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வி.ஜி.வி.கார்டன் அருகே மாநகராட்சி துப்புரவுபணியாளர்களுக்கு மரியாதை செலுத்தி 25 பேருக்கு கொரோனா பாதுகாப்பு சீருடை வழங்கியும், பிரதமர் மந்திரி திட்டமான ஆயுஸிம்மன் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் 25 பேருக்கு தலா 5 லட்சம் மருத்துவக்காப்பீட்டுத்திடம், மற்றும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, முகக்கவசம் வழங்கப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கமாக சொல்லப்பட்டது.
இந்நிகழ்ச்சையை மண்டலத்தலைவர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டு செய்திருந்தார். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி, மாவட்ட செயலாளர் ஒர்க்சாப் கார்த்தி, மண்டல பொதுச்செயலாளர்கள் குமார், சதீஷ் மற்றும் தமிழ் வளர்ச்சி வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் சதாசிவம், செந்தில் உள்ளிட்ட கட்சி மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பலர் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.