திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020

திருப்பூர் மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி, திருப்பூர் மாநகரில் காலியாக
உள்ள ஊர்க்காவல்படை ஆளினர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.


ஊர்க்காவல்படை ஆளினர் பணிக்கான விண்ணப்பங்கள் குமரன் ரோடு வடக்கு காவல் நிலைய வளாகம் பின்புறம் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்கவேண்டும்.


1. பத்தாம்வகுப்பு (SSLC) கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும்.
2. 20 வயதுக்கு மேர்ப்பட்டவராகவும், 45 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
3. திருப்பூர் மாநகர எல்லைக்குள் வசிப்பராக இருக்க வேண்டும்.
4. நல்ல உடல்நலத் தகுதியுடன் இருக்கவேண்டும்.


மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 30.11.2020 க்குள்
விண்ணப்பிக்கவேண்டும். 30.11.2020 க்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக
ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image