திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்ட கழக செயலாளர்கள் (வார்டு 34,35,38,39,40,41) அனைவரின் இல்லத்திற்கும் சட்டப்பேரவை துணைத் தலைவரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ ஜெயராமன் நேரில் சென்று எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
உடன் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன், கழக அமைப்புச் செயலாளர் சி சிவசாமி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி, நல்லூர் பகுதி கழக செயலாளர் டெக்ஸ் வெல் முத்து, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கண்ணப்பன்,
மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அர்பன் வங்கி தலைவர் PKS சடையப்பன், கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் கருவம்பாளையம் மணி, மார்க்கெட் நா சக்திவேல், மாவட்ட பாசறை செயலாளர் லோகநாதன், VPN குமார், கீர்த்தனா அய்யாச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.